search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாரிக் அன்வர்"

    ரபேல் ஊழல் விவகாரத்தில் மோடியை சரத் பவார் ஆதரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரசில் இருந்து விலகிய தாரிக் அன்வர் ராகுல் காந்தி முன்னிலையில் இன்று காங்கிரசில் இணைந்தார். #TariqAnwar #TariqAnwarjoinsCongress
    புதுடெல்லி:

    இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியா காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1999-ம் ஆண்டு சரத் பவார், பி.ஏ. சங்மா மற்றும் தாரிக் அன்வர் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர். சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் என்னும் புதிய கட்சியை தொடங்கினர்.



    சமீபத்தில் ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக பிரதமர் மோடியை ஆதரிக்கும் வகையில் சரத் பவார் கருத்து தெரிவித்ததால் தேசியவாத காங்கிரசில் இருந்து விலகிய தாரிக் அன்வர், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்திருந்தார்.

    இந்நிலையில், டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த தாரிக் அன்வர் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். #TariqAnwar #TariqAnwarjoinsCongress
    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் தாரிக் அன்வர் இன்று கட்சியில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். #TariqAnwar #NCP #RafaleDeal
    புதுடெல்லி:

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தாரிக் அன்வர். கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான இவர், அக்கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார். கடந்த சில தினங்களாக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து இவருக்கும், கட்சி தலைவர் சரத் பவாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.



    அதாவது,  ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடிக்கு ஆதரவாக சரத் பவார் பேட்டி அளித்தார். ரபேல் ஒப்பந்தத்தில் மோடியின் நோக்கங்கள் தவறானவை அல்ல என்று கூறியிருந்தார். இதனால் பவார் மீது கடும் அதிருப்தி அடைந்த தாரிக் அன்வர் இன்று தேசியவாத கட்சியில் இருந்து விலகி உள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடி மீது எந்த தவறும் இல்லை என மராத்தி சேனலுக்கு சரத் பவார் அளித்த பேட்டி என்னை மிகவும் காயப்படுத்தியது. இதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன்.

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். எனது எதிர்கால அரசியல் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. என் ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசனை செய்து அறிவிப்பேன்’ என்றார். #TariqAnwar #NCP #RafaleDeal
    ×